மனைவியின் நினைவு நாளில், சென்னையில் பிரபல ரவுடி ஒருவர், மனைவியிடமே சென்று சேர தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் அப்பகுதியில் ரவுடியாக சுற்றித் திரிந்து வந்துள்ளார். ரவுடி பிரசாந்த் மீது ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறினர்.
இவரது மனைவி குளோரி கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரவுடி பிரஷாந்த் தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்த நிலையில், குளோரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று நள்ளிரவு ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…