பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் டார்ச்சர் செய்வதாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாய் ஸ்ருதி என்பவர் இந்த புகாரை தெரிவித்துள்ள நிலையில், அவரது கணவர் மோகனகிருஷ்ணன் உட்பட குடும்பத்தினர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாய் ஸ்ருதி தனது புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு 136 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்ச ரூபாய் பணத்தை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு திருமணம் செய்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் போது, ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை பிறந்தால் அதை அழித்து விட வேண்டும் என டார்ச்சர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கணவரின் குடும்பத்தாரின் எதிர்பார்ப்புக்கு மாறாக பெண் குழந்தையே பிறந்ததால் ரூ.5 லட்சம் வரதட்சணை தர வேண்டும் என்று பின்னர் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டதாக அந்த புகாரில் மேலும் குறிப்பிப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையிலேயே பெண் குழந்தை பிறந்ததால் அதிக வரதட்சணை கொடுக்குமாறு டார்ச்சர் செய்வதாக வந்துள்ள புகார் பெண்ணியவாதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…