சென்னையில் கல்லூரி மாணவர்கள் லோக்கல் ட்ரெயினில் வெளியே தலைகீழாக தொங்கியபடி அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
சமீபகாலமாகவே சென்னையில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் நடப்பது, லோக்கல் ட்ரெயினில் பட்டாக்கத்தியை வைத்து சாகசம் செய்வது என மக்களை தொடர்ந்து பீதிக்குள்ளாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் கடற்கரை ரயில் நிலையம் வரை லோக்கல் ட்ரைனில் குரங்கு போல் வெளியே தொங்கியபடி சென்றனர்.
ஜன்னல் கம்பிகளில் நின்றபடியும், தலைகீழாக தொங்கிய படியும் அவர்கள் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடக்கும் இந்த அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…