Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனாவ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1, 32, 756 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால், இதுவரை 1,31,980 பேர் கோரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 20 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதனால், ஈரோடு மாவட்ட சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…