சென்னையில் பிரசவத்தின்போது இறந்து பிறந்த சிசுவை அடக்கம் செய்ய வழியில்லாததால் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிஎன்கே சாலையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த சணல் பையை நேற்று முன்தினம் இரவு நாய்கள் இழுத்துச் சென்றுள்ளன. இதைப் பார்த்த அப்பகுதியினர் சணல் பையை எடுத்து பார்த்ததில் அதில் சிசு இருந்துள்ளது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சிசுவை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு செய்ததில், சணல் பையுடன் வந்த ஒரு வாலிபர் குப்பை தொட்டியில் பையை வீசி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திருவல்லிக்கேணி கஸ்துாரி பாய் அரசு மருத்துவமனையில் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (29) என்பவருக்கு குறைப்பிரசவத்தில் ஒரு பெண்மணிக்கு குழந்தை இறந்து பிறந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கவிதாவின் கணவர் தனுஷ் (33) தான் சணல் பையில் சிசுவை வீசி சென்றுள்ளார் என தெரியவந்தது. கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பு நடத்தி வரும் தனுசுக்கு குழந்தையை அடக்கம் செய்ய காசில்லாததால், குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவியுடன், கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் சிசுவின் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…