Virudhunagar News : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த மாதம் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. மேலும், மலை ஏற செல்லும் பக்தர்கள் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சதுரகிரி செல்லும் பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை போன்ற சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…