Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. தேனி திமுக பிரமுகர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!!

Sekar July 30, 2022 & 11:22 [IST]
பரபரப்பு.. தேனி திமுக பிரமுகர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!!Representative Image.

தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி தெற்கு ஒன்றியத்தில் திமுக பொறுப்பாளராக இருக்கும் ரத்தின சபாபதி, வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் கூட. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார். 

அப்போது திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவருடைய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உருட்டு கட்டை மற்றும் கற்களால் ரத்தினசபாபதியை தாக்கி உள்ளனர். மேலும் அவருடைய வீட்டின் மீதும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்ததை அடித்து, தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து காயம் அடைந்த ரத்தின சபாபதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், ரத்தின சபாபதி தாக்கப்பட்ட என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்