திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் இடுவாய்- ஆட்டையம்பாளையம் பகுதி அரசு ஆரம்ப பள்ளியில் நடந்த கிராமசபையில் தான் டாஸ்மாக்கை அகற்றக்கூடாது என கோரிக்கை விடப்பட்டது.
இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தலைமையில் திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், இடுவாய் கிராம நிர்வாக அதிகாரி ராதாமணி, சார்பு நீதிமன்ற நீதிபதி மேகலா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிராமசபையில் இடுவாய் பகுதி டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என எடுத்த தீர்மானத்திற்கு இந்த பகுதி சாலையோர வியாபாரிகள் சங்கம் என பெயரிட்டு வியாபாரிகள் அகற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு டாஸ்மாக் கடையை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கருத்து முன்வைக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…