ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதைக்கப்பட்ட மேலெழுந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.
பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால் கட்டப்பட்ட ஆண் சடலம் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் விசாரித்த போது, " ஒரு மாதத்திற்கு முன்பு பாசூர் அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்ற 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் அவருக்கு முறையாக கை கட்டு, கால் கட்டு, வாய்க்கட்டு, காலில் மஞ்சள் கயிறு கட்டி முறையாக அடக்கம் செய்துள்ளனர்". பிறகு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, புதைக்கப்பட்ட சடலம் மேலே எழுந்ததுள்ளது. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சடலம் அருகில் இருக்கும் முட்புதரில் மாட்டிக்கொண்டு, தண்ணீர் வற்றிய பிறகு துர்நாற்றம் வீசப்பட்டதாக வீசாரணையில் தெரிய வந்து. பிறகு துரைசாமியின் சடலத்தை அவரின் மகன் உதயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் துரைசாமியின் உடலை இரண்டாவது முறையாக அடக்கம் செய்யப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…