Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உள்ளே புகுந்த மழை நீர்.. பேருந்துக்குள் குடை பிடித்த அவலம்!!

Sekar September 06, 2022 & 15:30 [IST]
உள்ளே புகுந்த மழை நீர்.. பேருந்துக்குள் குடை பிடித்த அவலம்!!Representative Image.

ஈரோட்டிலிருந்து கூடலூர் சென்ற பேருந்தில் உள்ளே மழை நீர் கொட்டியதால் மக்கள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியைத் தாண்டி அமைந்துள்ள கூடலூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் அரசு பேருந்துகள் அவ்வப்போது நடுவழியில் பழுதாகி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  

இந்நிலையில் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து கூடலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்தனர். குடையில்லாதவர்கள் மழை நீர் உள்ளே புகுந்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் மலை மீது செல்லும்போது கடும் குளிரில், கொட்டும் மழை நீரில் நனைந்தபடி குழந்தைகளை வைத்துக்கொண்டு வந்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். 

இதனால் இயக்குவதற்கு தகுதியில்லாத அரசு பேருந்துகளை நெடுந்தொலைவிற்கு இயக்கக் கூடாது என கூடலூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்