சென்னை திருவொற்றியூர் காமதேவன் நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக மாதவிடாய் வராததால் இது சம்பந்தமாக சிறுமியின் தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் ரத்தம் இல்லாததால் சில சமயங்களில் காலதாமதமாக வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர்களும் அதை பற்றி கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரியதாக இருந்ததால் வயிற்றில் கட்டி ஏதாவது இருக்குமா? என பயந்துபோன சிறுமியின் தாய் அரசு ராஜீவ்காந்தி காந்தி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபொழுது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தான், இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
அதன்படி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தந்தை தான் குடிபோதையில் மகளிடம் பலமுறை உடலுறவு கொண்டுள்ளதாகவும், இதனால் தற்போது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை சிவலிங்கத்தை (வயது 40) போலீசார் கைது செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…