Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

விடாத கனமழை.. கடல்போல் காட்சி அளிக்கும் அணை.. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 

Nandhinipriya Ganeshan November 14, 2022 & 15:12 [IST]
விடாத கனமழை.. கடல்போல் காட்சி அளிக்கும் அணை.. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. Representative Image.

கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக உடுமலை அமராவது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிப்பாளையம், அணைப்பாளையம், ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதன்படி, தற்போது அமராவதி ஆற்றில் 27 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால் நீர்வளத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதோபோல் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக சண்முகா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், அமராவதி மற்றும் சண்முகா நதி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்