கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமானவரித்துறை இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்ட நிலையில், அந்த சோதனை 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25-க்கு மேற்ப்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26.ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து, நேற்று 2வது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று கரூர் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் உரிமையாளர்கள் கார்த்திக் மற்றும் அதிபர் ரமேஷ் ஆகிய இருவரின் சீல் வைக்கப்பட்ட வீடுகளில் சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடு மற்றும் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.கே பில்டர்ஸ், பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம்,காளிபாளையம் பெரியசாமி வீடு மற்றும் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழனி முருகன் நகை கடை என 7 இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருமானவரித்துறை அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் மட்டும் இன்று காலையும் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து, ஜவஹர் பஜார் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…