Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேலம் அருகே மளிகைக்கடையில் பணம் திருடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை - வீடியோ

Saraswathi Updated:
சேலம் அருகே மளிகைக்கடையில் பணம் திருடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை   - வீடியோRepresentative Image.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மளிகைக் கடையின் ஷட்டரை உடைத்து, ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயன். வாழப்பாடி மெயின் ரோட்டில் இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் விஜயன் மளிகைக் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை திரும்பிவந்து பார்த்தபோது, இரும்பு கேட் உடைக்கப்பட்டு, கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த விஜயன், உள்ளே சென்றபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கள்ளாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் விஜயன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைபெற்றுவருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்