ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், “மாணவ, மாணவிகளிடையே கஞ்சா உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெளிவாக கூறினர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றது.
மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்ய 53 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குழுக்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் 9 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டில் கஞ்சா வழக்கில் மொத்தம் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…