திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கௌதம், ஐடி ஊழியரான இவர் கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது உறவினர் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதால் பார்ப்பதற்காக கோயம்பத்தூரில் இருந்து தன்னுடைய 3 வயது மகன் பிரவித் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் பைக்கில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது பவானி லட்சுமி நகர் தாண்டி, சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்தின் மீது வந்த போது, அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை முந்திச்செல்ல முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பைக்மீது போதியது. இதனால் பைக்கில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் லாரியின் சக்கரம் கிருத்திகா மற்றும் அவரது மகன் பிரவித் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கௌதம் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் லேசான காயத்துடன் உயிர் தப்பிய கௌதம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மேலும், இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் கிருத்திகா, பிரவித் இருவரது உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்ததும் லாரியை நிறுத்துவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…