சென்னையில் கோயம்பேடு, உணவு தானிய மார்க்கெட்டில் திடீரென மளிகை பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஊட்டி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு மளிகைப் பொருள்கள் தினந்தோறும் குவிகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வின் எதிரொலியாக, மளிகைப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன் படி, சில மளிகைப் பொருள்களும் அதன் உயர்த்தப்பட்ட விலையையும் இங்கு காணலாம்.
மளிகைப் பொருள்கள் |
உயர்த்தப்பட்ட விலை |
1 கிலோ மிளகாய் |
ரூ.350 |
தனியா |
ரூ.250 |
மிளகு |
ரூ.550 |
ஏலக்காய் |
ரூ.1200 |
லவங்கம் |
ரூ.750 |
அண்ணாச்சிப் பூ |
ரூ.900 |
முந்திரி |
ரூ.650 |
பட்டை |
ரூ.300 |
துவரம்பருப்பு |
ரூ.125 |
சிறுபருப்பு |
ரூ.100 |
கடலை பருப்பு |
ரூ.70 |
உளுத்தம் பருப்பு |
ரூ.120 |
கடுகு |
ரூ.80 |
சீரகம் |
ரூ.280 |
சோம்பு |
ரூ.150 |
வெந்தயம் |
ரூ.100 |
திராட்சை |
ரூ.250 |
நெய் |
ரூ.230 |
டால்டா |
ரூ.120 |
இந்த விலையேற்றத்தைக் குறித்து, கோயம்பேடு மார்க்கெட்டின் உணவு தானிய வியாபாரி ஒருவர் கூறுகையில், “கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் கடந்த இரண்டு மாதமாகவே, மளிகைப் பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாகும்” என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…