சென்னையில் ஜோடியாக ஆண் நண்பர் ஒருவருடன் ரீல்ஸ் செய்த பெண்ணை கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவை வந்த பிறகு ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைத்து மட்டங்களிலும் பரவி விட்டது. மேலும் பலரும் ஸ்மார்ட்போன்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ் உள்ளிட்ட சிறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தத் வகையில் சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்த சாலமன் என்பவரது மனைவி ஈஸ்வரி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து இன்ஸ்டாவில் ஜோடியாக ரீல்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த ஈஸ்வரியில் கணவர் சாலமன் ஈஸ்வரியை வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சாலமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…