சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வரவேண்டும் இதை பாஜகவால் தான் சாத்தியமாக்க முடியும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். இதைத் தொடர்ந்து கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் 60சதவீதம் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 25தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து ஜி.கே மூப்பனார், காமராஜர் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இருமுறையும் பிரதமர் வேட்பாளர் தேர்வாகமால் போனதற்கு திமுக தான் காரணம். எதிர்காலத்திலாவது தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம். குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஏழைக்குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமரை உருவாக்க வேண்டும். அது பாஜக-வால் தான் முடியும்.
வரும் நாடாளுமன்ற தேர்த்தலில் 300தொகுதிகளில் நாம் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதற்காக பாஜக தொண்டர்கள் 9ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள். தற்போது மின்தடையால் தமிழகம் இருளில் முழ்கியுள்ளது. வெளிச்சத்திற்கு பாஜக-வால் தான் கொண்டு வரமுடியும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…