காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஈடு செய்யும் வகையில், தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கின.
இந்நிலையில், இந்த வாரமும் சனிக்கிழமை, அதாவது நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு நாளாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…