கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எஸ்.ரங்கசாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். கல்வியில் பின்தங்கி இருந்த தனது பிராந்தியத்தின் மூலை முடுக்கெல்லாம் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கத்தில், ஆர்த்தி எஜுகேஷனல் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து, திருச்செங்கோட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தற்போது இவரது கல்வி சாம்ராஜ்யம் ஆரம்பக் கல்வி முதல், பொறியியல், பல் மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல கிளைகளாக விரிந்துள்ளது.
கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்கிற்காக கல்வி ரத்னா என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் கல்வியில் அவரது முன்மாதிரியான பங்களிப்பை அங்கீகரித்து, அமெரிக்காவின் மேற்கு பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கல்வி தவிர்த்து ஜவுளி தொழில் மற்றும் இதர வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…