சென்னையில் இன்று ஒரே நாளில், ஒரு மருத்துவமனையில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எக்மோர் குழந்தை நல மருத்துவமனையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகளவிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரப்பி வருகின்றன.
இதற்கிடையே, சென்னையில் சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் தான் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பரவலாக சென்னை முழுவதுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், ஒரே நாளில் சென்னை எக்மோர் குழந்தை நல மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…