Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஓடும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி...சடலமாக மீட்பு!

Priyanka Hochumin October 18, 2022 & 13:58 [IST]
ஓடும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி...சடலமாக மீட்பு!Representative Image.

தாயுடன் செல்லும் போது கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி கவிதா மற்றும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் இவர்களின் மகள் ஜீவிதா நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது போகும் வழியில் கொக்கு பாறை ஓடையில் தண்ணீர் அதிகம் இருந்ததால், வண்டியில் இருந்து இறங்கி நடந்து கடக்க முயன்றனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ரெண்டு பெரும் தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டனர். சுமார் 500 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட கவிதா தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த மக்கள் அவரை காப்பற்றியுள்ளனர். ஆனால் ஜீவிதாவோ தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், எருமைப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சமபவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஜீவிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுதும் தேடியும் அவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

12 மணி நேரமாக தேடியும் கல்லூரி மாணவி கிடைக்காததால் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று காலை வரவழைக்கப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு ஜீவிதாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்