தேனியில் தாய்மாமன் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது, ஆற்றில் குளிக்கப்போய் தவறி விழுந்து புதுமணத் தம்பதி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த சஞ்சய் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
தாய்மாமா திருமணத்திற்கு லண்டனில் இருந்ததால் வரமுடியாத சஞ்சய், தற்போது ஊர் திரும்பிய நிலையில், போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார். இதையடுத்து போடி சென்ற தம்பதியை, சஞ்சய் அருகாமையில் உள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
கூடவே சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனையும் அழைத்து சென்றனர். போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் நால்வரும் குளிக்க இறங்கிய நிலையில், பாறையில் சறுக்கி நால்வரும் ஆற்றில் விழுந்துள்ளனர்.
இதில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சிறுவன் பிரணவ் மட்டும் தட்டுத்தடுமாறி கரையேறி அருகில் உள்ள ஒத்தக்கடை ராமராஜூக்கு தகவல் அளித்துள்ளார். ராமராஜ் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடலையும் மீட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…