திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், அந்த மாவட்டங்களிலுள்ள அணைகள், நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த வெறித்தனமான மழை காரணமாக அணையின் நீர் மட்டும் 84 அடியிலிருந்து 91.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 6921.99 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 78.80 அடியிலிருந்து சுமார் 50 அடி உயர்ந்து 128.44 அடியை எட்டியுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பகுதிகளான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி என அனைத்து இடங்களிலும் மழை பாரபட்சம் பார்க்காமல் செய்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…