பரமத்தி வேலூர் பகுதியில் விவசாயி ஒருவரை ஏடிஎம் கார்டு மூலம் ஏமாற்றி ரூ.40,000 பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள இருக்கூர் காக்காயன் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி நேற்று முன்தினம் மதியம் பரமத்தி வேலூர் ரோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க முற்பட்டுள்ளார்.
ஆனால் ஏடிஎம்மில் இருந்து பணம் வரவில்லை. இந்நிலையில் அவருக்கு பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர் அவரது கார்டை வாங்கி தான் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். எனினும் பாலசுப்பிரமணி அதற்கு மறுப்பு தெரிவித்து கார்டை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் பாலசுப்பிரமணியின் கார்டுக்கு பதிலாக, அது போலவே இருந்த மற்றொரு கார்டை கொடுத்துள்ளார். இதை கவனிக்காத பாலசுப்ரமணி கார்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
இதற்கிடையே அவர் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ரூ. 40 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி ஏடிஎம் கார்டை பார்த்தபோது, அந்த கார்டு மாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது.
இதையடுத்து ஏடிஎம் கார்டை அவர் தனது மகன் மூலம் லாக் செய்துவிட்டு நடந்த சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…