Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகருக்கு அர்ச்சனை செய்த கிளிகள்.. திருப்பூரில் ஆச்சரியம்!!

Sekar September 03, 2022 & 12:14 [IST]
விநாயகருக்கு அர்ச்சனை செய்த கிளிகள்.. திருப்பூரில் ஆச்சரியம்!!Representative Image.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூரில் இரண்டு கிளிகள் விநாயகருக்கு மலர்களால் அர்ச்சனை செய்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரம்-கிருத்திகா தேவி தம்பதியினர் வீட்டில் இரு கிளிகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மகள் சாய்ஸ்ரீ இரண்டு கிளிகளுக்கும் பேச மற்றும் பாட பயிற்சி அளித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று குடும்பத்தினர் விநாயகருக்கு வழிபாடு செய்தனர். குடும்பத்தினர் செய்வதை பார்த்த இரு கிளிகளும், பூக்களை கிள்ளி விநாயகருக்கு போட்டு அர்ச்சனை செய்தன. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இது குறித்து பேசிய மோகன சுந்தரத்தின் மகள் சாய்ஸ், ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டின் முன்பு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தினோம்.

அதன் பிறகு கிளி எப்போது வெளியே சென்றாலும் தானாகவே வீட்டுக்கு திரும்ப வந்து விடும். இதனால் அதற்கு துணையாக இன்னொரு கிளியையும் வாங்கி வளர்த்து வந்தோம். இரண்டு கிளிகளும் தற்போது நண்பர்களாக எங்கள் வீட்டில் வளர்கின்றன. 

இரண்டு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று நாங்கள் அனைவரும் வழிபடுவதை பார்த்த இரு கிளிகளும், பூக்களை விநாயகர் மீது போட்டு அர்ச்சனை செய்தது எங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது’’ என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்