திருப்பூர் மாவட்டத்தில் திருமணமான சிலமணி நேரங்களிலேயே மணமகனும் மணமகளும் திருமண உறவை உதறித் தள்ளி பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலை பூலுவப்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பனியன் கம்பெனி ஊழியருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 வயது இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் மத்தியில் இருவருக்கும் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தான் மணமகனின் காலை மணமகள் பார்த்துள்ளார். மணமகனுக்கு 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை கண்ட அவர் இதுகுறித்து கேட்டபோது, ஒரு விபத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக மணமகன் கூறியுள்ளார்.
இதனால் மிகவும் ஷாக்கான மணமகள், இதுகுறித்து தன்னிடம் முன்பே கூறாமல் மறைத்து விட்டதாக கூறி, தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விவகாரம் திருப்பூர் கொங்குநகர் பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல, போலீசார் இரு குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் தனித்தனியே தங்கள் வழியை பார்த்து புறப்பட்டு சென்றனர். திருமணமான சில மணி நேரத்தில் திருமண பந்தம் முடிவுக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…