Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாட்ஸ்ஆப் லிங் மூலம் பகுதிநேர வேலை மோசடி- 5,400வழக்குகள் பதிவு

Baskaran Updated:
வாட்ஸ்ஆப் லிங் மூலம் பகுதிநேர வேலை மோசடி- 5,400வழக்குகள் பதிவு Representative Image.

சென்னை: பகுதிநேர வேலை எனக் கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 5,400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடம் தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு துருப்பு சீட்டாக அவர்கள் பகுதிநேர வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு லிங்கை பயனாளர்களுக்கு அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்தால், அவர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ள குழுவில் சேர்க்கின்றனர்.

அதன்பிறகு ரூ.10ஆயிரம் முதலீடு செய்தால், அதிக வட்டி தரப்படும் என அறிவிக்கின்றனர். அதை நம்பி மக்கள் பலரும் பணத்தை செலுத்துகின்றனர். பிறகு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் என தெரிவித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்