Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போக்ஸோ குற்றவாளிக்கு சாகும் வரை சிறை.. திருப்பூர் மகிளா கோர்ட் தீர்ப்பு!!

Sekar August 17, 2022 & 19:34 [IST]
போக்ஸோ குற்றவாளிக்கு சாகும் வரை சிறை.. திருப்பூர் மகிளா கோர்ட் தீர்ப்பு!!Representative Image.

திருப்பூரில் மகிளா நீதிமன்றம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போக்ஸோ குற்றவாளி ஒருவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதிச்சைச் சேர்ந்தவர் அபபாஸ். 40 வயதான இவர் கைத்தறி நெசவுத் தொழிலாளியாக பனி புரிந்து வந்தார். இவர் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பாஸை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட் நீதிபதி நாகராஜன், குற்றவாளி அப்பாஸுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்