திருப்பூரில் மகிளா நீதிமன்றம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போக்ஸோ குற்றவாளி ஒருவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதிச்சைச் சேர்ந்தவர் அபபாஸ். 40 வயதான இவர் கைத்தறி நெசவுத் தொழிலாளியாக பனி புரிந்து வந்தார். இவர் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பாஸை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட் நீதிபதி நாகராஜன், குற்றவாளி அப்பாஸுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…