சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்தவர் குமரேசன். நிறைமாத கர்ப்பிணியான இவருடைய மனைவி நிவேதா (21) -க்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவருடன் அவடைய தாய் விஜயலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோரும் சென்றனர்.
செங்குளம் பகுதியில் சென்ற போது, ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணியான நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன்(27), தொழில்நுட்ப அலுவலர் சத்யா(30) மற்றும் உறவுப்பெண் திருச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த கர்ப்பிணி பெண் அவரது தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…