Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடப்பாடி அருகே புரோட்டா குருமாவில் பூரான் - ருசித்து சாப்பிட இருவர் மயக்கம்!

Baskaran Updated:
எடப்பாடி அருகே புரோட்டா குருமாவில் பூரான் - ருசித்து சாப்பிட இருவர் மயக்கம்!Representative Image.

சேலம்: எடப்பாடி அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எட்டிக்குட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கச்சுப்பள்ளி கிராமம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவரும் 7 புரோட்டா குருமாவுடன் பார்சல் வாங்கி, வீட்டில் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கடைசியாக புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் புரோட்டா சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொங்கணாபுரம் போலீசார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கம் அடைந்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்