Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு- ஆர்.எஸ்.பாராதி பரபரப்பு குற்றச்சாட்டு

Baskaran Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு- ஆர்.எஸ்.பாராதி பரபரப்பு குற்றச்சாட்டுRepresentative Image.

சென்னை: அதிமுக-பாஜக மோதலை திசைத் திருப்பவே அமலாக்கத் துறை சோதனை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி  மேற்கொண்டு வருகின்றனர. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், ஆர்.எஸ்.பாரதி ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர், அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதிமுக-பாஜக இடையே மோதல் முற்றி வருகிறது. இதை திசை திருப்பவே இந்த சோதனை நடத்து வருகிறது எனத் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்