Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளிக்கு செல்ல பயம்.. 8 ஆம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு.. பெற்றோர் சோகம்!!

Sekar September 19, 2022 & 18:27 [IST]
பள்ளிக்கு செல்ல பயம்.. 8 ஆம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு.. பெற்றோர் சோகம்!!Representative Image.

பள்ளிக்கு செல்ல பயந்து 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  ஜான்சன்பேட்டையில் வசித்து வரும் சிவகுரு என்பவரின் மகன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுவன் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, மாணவன் பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டியே இருந்துள்ளான். எனினும் பெற்றோர் சிறுவனை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்து வந்துள்ளனர்.

இதனால் ஒரு வழியாக சமாதானமடைந்து இன்று பள்ளிக்கு செல்வதாக சிறுவன் கூறிய நிலையில், பயம் காரணமாக திடீரென வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் மரணம் குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்