ஈரோடு மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே சைக்கிளை இரண்டு முறை வழங்கியதால், வகுப்பெடுக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன், பள்ளிக்கு வருகை தந்து மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார். இரண்டு மணி நேரம் கழித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவிமான கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கு வருகை தந்தார்.
இதையடுத்து அவர் தலைமையில் மீண்டும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரே சைக்கிளை இரண்டு முறை நிகழ்ச்சி நடத்தி இரண்டு முறை வழங்கியாதால், மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முடியாமல், ஆசிரியர்கள் அவதிப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…