ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தனது செல்போனில் ஆன்லைன் வகுப்பு மூலம் 10 ஆம் வகுப்பு படித்துவந்தார். அப்போது ஷேர்சாட் செயலியை தனது செல்போனை பதிவிறக்கம் செய்து உபயோகித்து வந்துள்ளார். அப்போது அதில் கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்ற இளைஞர் மாணவிக்கு பழக்கமாகியுள்ளார்.
நாளடைவில் செல்போனில் பேசும் அளவிற்கு இவர்களது அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆக்டொபர் மதம் 21 ஆம் தேதி மாணவியின் வீட்டிற்கு நேரடியாக வந்து உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது போன்று பலமுறை இது போன்று செய்து வரவே இளைஞனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடம் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜேசுதாஸ் மாணவியின் தந்தை செல்போனிற்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில் ஜேசுதாசும் அந்த மாணவியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. மேலும் இதனை இணையத்தில் பதிவேற்றம் இருக்க எனக்கு பணம் வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜேசுதாஸை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் ஜேசுதாஸை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது எனவே அவரை போக்ஸோவில் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…