சென்னையில் காதலிக்கு பிறந்தநாள் பரிசாக, தனது உயிரையே கொடுத்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மோகன், அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று திடீரென வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், போலீசார் தகவலறிந்து வந்து மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர்.
அப்போது மோகன் காதலித்து வந்த பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் மோகனுடன் பேசுவதை நிறுத்திவிட்ட நிலையில், நேற்று அந்த பெண்ணின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தொலைபேசியில் அழைத்துள்ளார்.
அப்போது யார் கொடுக்கும் பரிசுக்கு மதிப்பு அதிகம் என இருவரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உனக்காக உயிரையே கொடுப்பேன் எனக் கூறிய மோகனை திட்டிவிட்டு அந்த பெண் போனை வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காதலிக்கு பிறந்த நாள் பரிசாக உயிரையே கொடுக்க முடிவு செய்த மோகன், இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார். பிரிந்து சென்ற காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெற்றோரை தவிக்கவிட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…