சென்னை: தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது. இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக சார்பில் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என் ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் 20.06.2023 முதல் 20.07.2023 வரை கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கதை தொடங்கி வைக்கிறார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு முதல் கையெழுத்திடுகிறார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…