ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கர்நாடக எல்லை பகுதியில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே நேற்று மதியம் குட்டியுடன் யானை ஒன்று வந்து சுற்றித்திரிந்துள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லாரியில் ஏற்றி வந்துள்ளனர். இந்த லாரியை கண்ட யானை தனது குட்டியுடன் அந்த லாரியை வழிமறித்துள்ளது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த கரும்பை ஒவ்வொன்றாக பிடுங்கி தின்றுள்ளது.
இதனையடுத்து, அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானையை பார்த்ததும் வாகனங்களை ஓரமாக அணிவகுத்து நிறுத்தினர். இதனால் டிரைவர், லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாலையோரத்தில் எறிந்தார். இதனையடுத்து, யானை குட்டியுடன் சென்று சாலையோரத்தில் இருந்த கரும்பை எடுத்து தின்றது.
மேலும், அப்பகுதியில் இருந்து டிரைவர் லாரியை நகர்த்தி மெதுவாக சென்றானர். இதனால் அப்பகுதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…