Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேட்டை செய்த சிறுமிக்கு சூடு வைத்து கொலை.. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது!!

Sekar November 05, 2022 & 15:31 [IST]
சேட்டை செய்த சிறுமிக்கு சூடு வைத்து கொலை.. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது!!Representative Image.

திருப்பூர் மாவட்டத்தில் துறுதுறுவென இருந்த சிறுமி சூடு வைத்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருவள்ளுவர் நகரில் மல்லிகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26)-கௌரி(24) என்ற இந்த தம்பதியினருக்கு 4 வயதுள்ள ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். 

மல்லிகாவும் அதே பகுதியில் வசித்து வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உறவினரான ராஜேஷ் குமார்(31)-கீர்த்திகா(24) தம்பதி அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், கீர்த்திகா அங்கு வரும்போதெல்லாம் ஷிவானியுடன் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி மல்லிகாவின் வீட்டிற்கு வந்த ராஜேஷ்குமார்- கீர்த்திகா தம்பதியினர் கௌரியிடம் ஷிவானியை தங்களது ஊருக்கு அழைத்து சென்று சிறிது நாள் வைத்திருந்து அழைத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

குழந்தையில்லாத தம்பதி ஆசையாக கேட்கிறார்களே என்று பரிதாபப்பட்ட கௌரி, தனது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 ஆம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி ஷிவானியை மதுரை அரசு மருத்துவமனையில் கீர்த்திகா சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமியின் உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஷிவானியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தனது மகளைப் பார்த்து கதறி அழுதனர். 

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ராஜேஷ் குமாரையும், கீர்த்திகாவையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கீர்த்திகா வீட்டுக்கு சென்ற சிறுமி அங்கு சேட்டைகள் அதிகமாக செய்ததால் கடுப்பான கீர்த்திகாவும், ராஜேஷ்குமாரும் ஷிவானியின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் கடந்த 2 ஆம் தேதி சிறுமி வீட்டுக்குள்ளேயே இயற்கை உபாதை கழித்ததால் கோபமடைந்த கீர்த்திகா சிறுமியை பிடித்து கீழே தள்ளியதால் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். குழந்தையில்லாத தம்பதி என பரிதாபப்பட்டு தங்கள் மகளை அனுப்பி வைத்த பெற்றோருக்கு மகள் சடலமாக திரும்பியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்