ஆடி 18 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடி பெருக்கில், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் என காவிரி ஆற்றில் இறங்கி வழிபாடு நடத்துவர், ஆனால் காவிரி ஆற்றி ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகின் காரணமாக ஆடிப்பெருகில் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…