Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்..! இன்று ஆலோசனை..!

Muthu Kumar August 02, 2022 & 13:10 [IST]
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்..! இன்று ஆலோசனை..!Representative Image.

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக மாநகராட்சி மண்டலம் 1 முதல் 5 வரையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.  

இந்நிலையில், அம்மா உணவகங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்குவதில் பல்வேறு சிக்கல் உள்ளதால் வட சென்னை பகுதியில் சமையல் கூடம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று மாலை 4 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும்,  ஒரு நாளில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் காலை உணவிற்கான மூலப் பொருளின் அளவை அறிவித்துள்ளனர். அதன்படி, 50 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு மற்றும் காய்கறிக, ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானிய உணவு ஆகியவற்றை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்