மதுரையில் மளிகை கடையில் இலவசமாக பணமும், சிகரெட்டும் கேட்டு தகராறு செய்த வாலிபர்கள், கடை உரிமையாளரை அடித்துவிட்டு கடையை சூறையாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் கரும்பாலை என்ற பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தக்கடைக்கு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்திக் என்ற எலி கார்த்தி, அய்யனார் மகன் பாவரசு, பால்பாண்டி மகன் பாலசக்தி ஆகிய மூவரும் சென்றனர். கடையிலிருந்து பணமும் சிகரெட்டும் இலவசமாக கேட்டு கடை உரிஇமையாளரிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர். ஆனால், எதுவும் தரமுடியாது என கூறிவிட்டதால், அவரை உருட்டு கட்டையால் அடித்துதுறத்தியுள்ளனர்.
அதன்பிறகு கடையில் உள்ள பொருட்களை அவர்கள் சூறையாடியுள்ளனர். இதுதொடர்பாக சொக்கலிங்கம் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கார்த்தி என்ற எலி கார்த்தி, பாவரசு இருவரையும் கைது செய்தனர். மளிகை கடையை அடித்து நொறுக்கும் வீடியோவை காவல்துறையினர் வெளியீட்டு, தப்பி ஓடிய பால சக்தியை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…