Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,981.28
-5.75sensex(-0.01%)
நிஃப்டி22,180.75
-19.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை

Chandrasekar Updated:
மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை Representative Image.

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரியை சேர்ந்த அஜித், வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர் மருந்து விற்பனையாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடிரென வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது திடீரென மர்ம பொருள் வெடித்து அங்கு வைத்திருந்த பொருட்கள் வெடித்து சிதறிய நிலையில் கிடந்துள்ளது.

இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மற்றும்அவரது குடும்பத்தினர்2 நாட்களாக வீட்டில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? வேறு ஏதேனும் வெடிக்கும் பொருளா என்ற கோணத்தில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம பொருள் வெடித்ததில் சமையலறையில் உள்ள பொருட்கள் தீப்பற்றிய நிலையில் சேதமடைந்து சிதறி கிடந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்