Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீடுகளை சூழ்ந்த மழைநீர்....கால்வாய் வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி...!

Bala August 19, 2022 & 12:00 [IST]
வீடுகளை சூழ்ந்த மழைநீர்....கால்வாய் வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி...!Representative Image.


விருதுநகர் அருகே வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பகுதிகள் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றைய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி விருதுநகர் மாவட்டதில் பட்டம் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாகவும், தெருக்களில் கல்வாய் வசதியில்லாத காரணத்தாலும், வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி கிடப்பதாகவும், இதனால் விபத்து மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பட்டம் புதூர் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை புகார் கூறிய போதும், அந்த பகுதி ஊராட்சி எல்லைக்குள் இல்லை என்றும், இதனால் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர இயலாது என ஊராட்சி மன்ற தலைவர் கூறுவதாகவும், ஆனால் வீட்டு வரி உள்ளிட்ட கடை வரிகளை மட்டும் ஊராட்சியில் இருந்து வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். மழை காலம் வரவுள்ளதால் மழைநீர் இன்னும் அதிகமாக தேங்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் அதிகாரிகள் உடனடியாக சாலை மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்