சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 21). பிசிஏ பட்டதாரியான இவர், நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மது அருந்தியுள்ளார். பின்னர், நண்பர்களுடன் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.
மகாவிஷ்ணு வெகுநேரமாகியும் எழுவில்லை என்பதால் அச்சமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பி பார்த்துள்ளனர். அவர் எந்த அசைவும் இன்றி கிடந்ததால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நள்ளிரவு நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.
மகாவிஷ்ணுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வியாசர்பாடி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள இளைஞர்களிடையே போதைப்பொருள் உபயோகமும், அதற்காக சைடிஸ் என்ற பெயரில் தரமற்ற பொருட்களால் தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…