சென்னை குரோம்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து பீகாரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், சென்னையிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஷட்டரை திறக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து பீகாரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கும் நீரில் மின் ஒயர்கள் மூழ்கி உள்ளதால், மின் கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்தது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…