கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் போட்டியாளர்களில் சிலர் ஹிந்திதான் தெரியும் தமிழ் எழுத தெரியாது என ஓப்பனாக பேசியிருப்பது பகிர் கிளப்பியுள்ளது.
5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்த ஆண்டுக்கான ஆறாவது சீசன் தொடங்கியது. வழக்கத்துக்கும் அதிகமான போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ பிரச்னைகள் 3வது நாளிலிருந்தே நடைபெற்று வருகிறது.
பொதுமக்களிலிருந்து போட்டியாளராக மாறி உள்ளே சென்ற தனலட்சுமி நடந்துகொள்ளும் விதம் பலரையும் எரிச்சலடைய செய்துள்ளது. அந்த வகையில் அவரைச் சுற்றியே இந்த வார நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. கமல்ஹாசனும் பிக்பாஸ் போட்டியாளர்களை தமிழில் பேசதாதற்காக கண்டித்தார்.
ஷெரினாவை மலையாளத்தில் பேசியதற்காக கண்டித்தும், மக்களால் நிராகரிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிவித்தும் கமல்ஹாசன் செய்தது மிக சிறப்பான செய்கை. இந்நிலையில், மைனா இந்த வாரத்துக்காக கண்டென்டை ரெடி செய்துவிட்டார்.
தமிழில் எழுதிக் காட்டும்படி இந்த வார பிக்பாஸ் வீட்டுத் தலைவர் மைனா கேட்க, பலரும் தமிழில் தனக்கு எழுத தெரியாது என்பதை வெளிப்படையாக கூறி அதிர வைத்துள்ளனர். இத்தனை பேருக்கு தமிழில் எழுத தெரியாதா என ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…