உண்மையை தெரிந்துக்கொண்ட கார்த்தியின் தாய், சுந்தரி மற்றும் கிருஷ்ணனை கூட்டிட்டு அனு வீட்டுக்குப் போறாங்க. அங்கு போற வழில என்னென்னமோ பண்ணி தடுக்க ட்ரை பண்றாங்க கிருஷ்ணனும் சுந்தரியும். ஆனா விடாப் புடியா இருக்காங்க கார்த்தியோட அம்மா. வேற வழி இல்லாம அவங்க அனுவோட வீட்டுக்கும் போயிட்டாங்க.
Most Read:- சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்….!
இங்க அனு சுந்தரி வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு கார்த்தி கிட்ட கண்டபடி திட்டுகிறாள். அதாவது என்னால எதை வேணாலும் ஏத்துக்க முடியும் ஆனா பொய் சொல்றது மட்டும் மன்னிக்கவே முடியாதுன்னு சொல்றாங்க. இதை கேட்டவுடனே கார்த்திக்கோ "க்கும்! நாம வேற ஏக்கர் கணக்குல ஏமாத்தி பொய் சொல்லி வச்சிருக்கோம். இது மட்டும் இவளுக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்" நினைக்கிறான்.
அப்புறம் ஒருவழியா எல்லாரும் அனு வீட்டுக்கு வந்துட்டாங்க. வந்து கார்த்திக்னு கத்தும் போது அனு அம்மா கீழ இறங்கி வராங்க. அவங்க வந்த உடனே அவங்களையும் அவங்க பொண்ணு அனுவையும் கண்டபடி திட்டுறாங்க. அப்புறம் நடந்த உண்மைய அனு அம்மா சொல்றத கேட்டுட்டு கொஞ்சம் நார்மல் ஆகுறாங்க. இருந்தாலும் இதுக்கு ஒரு முடிவு தெரியாம நான் இங்க இருந்து போக மாட்டனேனு வெயிட் பண்றாங்க.
அனு மற்றும் கார்த்தி வெளிய போயிட்டு வீட்டுக்கு வராங்க. ஏன் கேட்ட சாத்தாம வச்சிருக்கீங்கனு செக்யூரிட்டி கிட்ட கேட்டாள் அனு. அப்புறம் சுந்தரி மேடம் வந்திருக்காங்கனு சொன்ன உடனே இன்னைக்கு அவளுக்கு இருக்குன்னு சொல்லிட்டு அனு உள்ள போறாள். பின்னாடி கார்த்தியோ போச்சு இன்னைக்கு நாம செத்தோம்னு பீதில தயங்கி தயங்கி வரான். உள்ள போன அனுவுக்கு எல்லா உண்மையும் தெரிய வருமா? இல்ல அவளோட வயித்துல வளர குழந்தைக்காக கார்த்தி அம்மா எதுவும் சொல்லாம பேசாம போயிடுவாங்கலா வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…