மலையாள திரையுலகில் பிரபலமானவர் கொல்லம் சுதி. 16 வயதில் கலையுலகில் அடியெடுத்து இவர், தொலைக்காட்சி நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர், இவர் 2015 ஆம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கினார். 'காந்தாரி' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த சுதி, அதன்பிறகு கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடனில் மார்பப்பா, தீட்ட ரப்பை, வகைதிருவ், ஒரு இன்டர்நேஷனல் லோக்கல் ஸ்டோரி, கேசு ஈவெடினர் நாதன், எஸ்கேப், ஸ்வர்கதிலி காட்டுறும் போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தனார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 04.30 மணியளவில் கோழிக்கோடு வடகரா பகுதியில் உள்ள தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த கொல்லம் சுதி கொடுங்கல்லூர் ஏஆர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் நடிகர் பலியானது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது கொல்லம் சுதி மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கலை வெளிபடுத்தி வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…